Tuesday, 16 August 2011

யாழ்.மண்ணைத் தொட்டுப் பொட்டு வைத்தால் எவருக்கும் வீரம் தானாக வரும்- லியோனி

வீரம் விளைந்த தன்மானத் தமிழன் வாழ்கின்ற யாழ்.மண்ணில் பட்டிமன்றம் நடத்துவதற்கு நாம் கொடுத்து வைத்தவர்கள் என்று தெரிவித்துள்ள திண்டுக்கல் ஐ.லியோனி, யாழ்.மண்ணைத் தொட்டுப் பொட்டு வைத்தால் தமிழனுக்கான தன்மானம் தானாகவே வந்து விடும் என்றும் தெரிவித்தார்.

நேற்று நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் இந்தியாவிலிருந்து வருகை தந்த திண்டுக்கல் ஐ.லியோனி குழுவினரின் பட்டிமன்றம் நடைபெற்றது.

கலாசாரத்தைப் பெரிதும் பேணிப் பாதுகாப்பது பழைய பாடல்களா? புதிய பாடல்களா? என்ற தலைப்பில் நடைபெற்ற மேற்படி பட்டிமன்றத்தில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் தமிழ் என்றால் யாராவது உடனே சொல்வது இலங்கைத் தமிழனைக் குறித்தே. அந்தளவுக்கு அழகும், பெருமையும், தன்மானமும், வீரமும் கொண்டது இலங்கைத் தமிழ்.

அவற்றிலும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் யாழ்ப்பாணத்தில் வாழுகின்ற தமிழர்கள் பேசுவதுதான் ஒழுங்கான தமிழ் என்று அடையாளப்படுத்தக் கூடியது.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் யாழ்.மண்ணைத் தொட்டுப் பொட்டு வைத்தால் மட்டுமே போதும் ஒரு தமிழனுக்கு இருக்க வேண்டிய தன்மானமும், வீரமும் தன்னாலே வந்து விடும்.

அதனாலேதான் யாழ்.மக்களுடன் பேச வேண்டும் என்ற அவா எங்களுக்கு உண்டு என்றார்.

No comments: