சிறீலங்கா – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 ஆவது ஒருநாள் சர்வதேச கிறிக்கெட் போட்டி 03-07-2011 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுக் கொண்டிருந்த போது ஈழத்தமிழன் ஒருவர் தமிழீழ தேசியத் கொடியை ஏந்தியவாறு மைதானத்தில் ஓடியுள்ளார்.
பிரித்தானியத் தமிழ் இளையோரால் சிறீலங்கா கிறிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற்றுவரும் புறக்கணிப்பு போராட்டத்தின் முக்கிய நாளான இன்றைய தினம் மத்திய லண்டன் பகுதியில் உள்ள லோர்ட்ஸ் மைதானத்தில் சிறீலங்காவிற்கும், இங்கிலாந்திற்கும் இடையிலான இறுதிப் போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்த போதே ஈழத் தமிழ் வீரன் பிரசன்னா தமிழீழத் தேசியக்கொடியுடன் மைதானத்துக்குள் குறுக்காக ஓடி அங்கு நிறைந்திருந்த பார்வையாளர்கள் உட்பட அனைத்து ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
உடனடியாக விளையாட்டு மைதானத்தில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்தவர்கள் சென்று அந்த இளைஞ்ஞனை கைதுசெய்து அப்புறப்படுத்தினர். பின்னர் பிரித்தானிய காவல்துறையினரிடம் அந்த ஈழத்தமிழன் கையளிக்கப்பட்டு காவல்துறையினரால் வாகனத்தில் ஏற்றிச்செல்லப்பட்டார்.
உடனடியாகவே அங்கு நின்ற மக்கள் சிலரும், இளையோரும் தமக்கு தெரிந்த சட்டவாளர்களுக்கு தெரிவித்து அந்த இளைஞ்ஞனை வெளியில் கொண்டுவர ஆவன செய்யுமாறு கேட்டுக்கொண்டதையும் காணமுடிந்தது.
இந்த வீரத் தமிழனின் செய்கையால் ஏற்பட்ட விழிப்புணர்வின் காரணமாக மைதானத்துக்குள் நிறைந்திருந்த மக்கள் வெளியில் வந்து ஆர்ப்பாட்டத்தை பார்த்ததோடு மட்டுமன்றி எதற்காக செய்கிறீர்கள் என்ற விளக்கத்தை கேட்டு தமது ஆதரவையும் தெரிவித்து இளையோரால் வழங்கப்பட்ட துண்டுப்பிரசுரங்களையும் பெற்றுச்சென்றனர்.
இன்று தமிழ் இளையோர்களால் முன்னெடுக்கப்பட்ட 7வது புறக்கணிப்பு போராட்டம் நூற்றிக்கும் அதிகமான மக்களுடன் எழுச்சிகரமாக நடைபெற்றது. வயது வேறுபாடின்றி சிறுவர் முதல் பெரியோர் வரை இன்றைய இந்த புறக்கணிப்பு போராட்டத்தில் கலந்து இளையோருக்கு தோள் கொடுத்தார்கள்.
மைதானத்தில் ஈழத்தமிழன் ஒருவர் தமிழீழ தேசியத் கொடியுடன் ஓடி அங்கு பரபரப்பை ஏற்படுத்தியதை இங்கிலாந்தின் பிரபல்யமான ஸ்கை தொலைகாட்சி ஒளிபரப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.







பிரித்தானியத் தமிழ் இளையோரால் சிறீலங்கா கிறிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற்றுவரும் புறக்கணிப்பு போராட்டத்தின் முக்கிய நாளான இன்றைய தினம் மத்திய லண்டன் பகுதியில் உள்ள லோர்ட்ஸ் மைதானத்தில் சிறீலங்காவிற்கும், இங்கிலாந்திற்கும் இடையிலான இறுதிப் போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்த போதே ஈழத் தமிழ் வீரன் பிரசன்னா தமிழீழத் தேசியக்கொடியுடன் மைதானத்துக்குள் குறுக்காக ஓடி அங்கு நிறைந்திருந்த பார்வையாளர்கள் உட்பட அனைத்து ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
உடனடியாகவே அங்கு நின்ற மக்கள் சிலரும், இளையோரும் தமக்கு தெரிந்த சட்டவாளர்களுக்கு தெரிவித்து அந்த இளைஞ்ஞனை வெளியில் கொண்டுவர ஆவன செய்யுமாறு கேட்டுக்கொண்டதையும் காணமுடிந்தது.
இந்த வீரத் தமிழனின் செய்கையால் ஏற்பட்ட விழிப்புணர்வின் காரணமாக மைதானத்துக்குள் நிறைந்திருந்த மக்கள் வெளியில் வந்து ஆர்ப்பாட்டத்தை பார்த்ததோடு மட்டுமன்றி எதற்காக செய்கிறீர்கள் என்ற விளக்கத்தை கேட்டு தமது ஆதரவையும் தெரிவித்து இளையோரால் வழங்கப்பட்ட துண்டுப்பிரசுரங்களையும் பெற்றுச்சென்றனர்.
இன்று தமிழ் இளையோர்களால் முன்னெடுக்கப்பட்ட 7வது புறக்கணிப்பு போராட்டம் நூற்றிக்கும் அதிகமான மக்களுடன் எழுச்சிகரமாக நடைபெற்றது. வயது வேறுபாடின்றி சிறுவர் முதல் பெரியோர் வரை இன்றைய இந்த புறக்கணிப்பு போராட்டத்தில் கலந்து இளையோருக்கு தோள் கொடுத்தார்கள்.
மைதானத்தில் ஈழத்தமிழன் ஒருவர் தமிழீழ தேசியத் கொடியுடன் ஓடி அங்கு பரபரப்பை ஏற்படுத்தியதை இங்கிலாந்தின் பிரபல்யமான ஸ்கை தொலைகாட்சி ஒளிபரப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.









No comments:
Post a Comment