| பிரான்சை சேர்ந்த 35 வயது டய்க் கிறிஸ் 3 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவர் ஆவார். அந்த வீரர் பாரிஸ் கிறிஸ்தவ ஆலயம் முன்பாக 95 அடி உயரத்தில் பறந்து வந்து புதிய சாதனை படைத்தார். ஆயிரக்கணக்கான மக்கள் அவரது சாகச நிகழ்ச்சியை கண்டு களித்தனர். அவர் ரோலர் ஸ்கேட்டிங்கில் மிக உயரமான இடத்தில் இருந்து சறுக்கி வந்து அதிக உயரத்தில் தாவி இந்த சாதனையை நிகழ்த்தினார். உடலில் இறக்கை கட்டி விட்ட வீரரை போல அவர் பறந்து வந்ததை பார்வையாளர்கள் மெய் மறந்து பார்த்தனர். அந்த வீரர் 95 அடி உயரத்தை நீளம் தாண்டுதல் வீரரைப் போல உயரமான இடத்தின் ஒரு பகுதியில் இருந்த இன்னொரு பகுதிக்கு தாவினார். அதே போன்று அவர் வானில் சீறி பாய்ந்த போது திடீரென அவர் குட்டிக்கரணம் அடித்து தனது இலக்கு நிலையான காற்றுப்பை உள்ள இடத்தில் வந்து விழுந்தார். இவர் முந்தைய சாதனையான 79 அடி உயர சாதனையை மிஞ்சினார். அந்த சாதனையை அமெரிக்க வீரர் டானி வே செய்திருந்தார். 6 வயதில் இருந்து டய்க் கிறிஸ் ரேலர் ஸ்கேட்டிங் விளையாட்டில் ஈடுபட்டு வருகிறார். கடந்த ஆண்டு அந்த வீரர் இரு வேறுபட்ட அளவை இணைக்கும் இடத்தில் 131 அடி உயரத்தை பாய்ந்தார். அந்த சாதனையை அவர் பாரிஸ் ஈபிள் கோபுரத்தின் முதல் தளத்தில் இருந்து நிகழ்த்தினார். |
Monday, 4 July 2011
95 அடி உயரத்தில் பறந்து புதிய உலக சாதனை படைத்த நபர்(வீடியோ இணைப்பு)
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment