Sunday, 10 July 2011

சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரியே போலிக் காணொலியை தயாரித்தார் (வீடியோ இணைப்பு)
சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள போர்க்குற்றக் காட்சியின் உண்மையான மூலப்பிரதி என்று சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்ட காணொலியை இராணுவப் புலனாய்வுப் பிரிவே தாயாரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



இந்தக் காணொலியை சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரியான லெப்.கேணல் சுரேஸ் சாலியே தயாரித்து தமிழ்மொழியில் குரல் மாற்றம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் தேசிய புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவின் பணிப்பின் பேரிலேயே லெப்.கேணல் சுரேஸ் சாலி இந்த போலிக் காணொலிப் பதிவைத் தயாரித்துள்ளார்.

லெப்.கேணல் சுரேஸ் சாலி நன்றாக தமிழ்மொழியில் உரையாடும் தேர்ச்சி பெற்றவர் என்பதாலேயே அவரிடம் இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அத்துடன் இந்தக் காணொலிப் பிரதியைத் தயாரிப்பதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகளை மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்கவே வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments: