Thursday, 30 June 2011

தற்போது தடுப்புக்காவலில் உள்ள புலிகளைச் சுட்டு போர்குற்ற வீடியோ தயாரிப்பு ?



இறுதிக்கட்ட யுத்தத்தின் போது கைது செய்யப்பட்ட தற்போது தடுப்புக்காவலில் உள்ள முன்னாள் போராளிகளை இராணுவத்தினர் சுட்டுக் கொலை செய்து அந்த காணொளிகளை தமிழர்களுக்கு போர்க்குற்ற ஆதாரமாகக் கொடுக்க இராணுவம் முனைப்புக்காட்டி வருகிறது. தம்மிடம் உள்ள போராளிகள் சிலரை காட்டிற்குள் கூட்டிச்சென்று சுட்டுக்கொலைசெய்து, அதனை மோபைல் போனில் எடுத்து பின்னர் போர் குற்ற காணொளி எனக்கூறி அதனை பெருந்தொகைப் பணத்துக்கு விற்க இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சிலர் முயற்சிசெய்துள்ளனர் என அறியப்படுகிறது. இவ்வாறான வீடியோக்களை மலேசியா மற்றும் சிங்கப்பூரில் வைத்து பல லட்சம் ரூபாய்களுக்கு இலங்கை இராணுவத்தினர் விலைபேசி வருகின்றனர்.

வீடியோவாக இருக்கலாம், இல்லையேல் புகைப்படமாக இருந்தாலும் அதில் பதிவாகியுள்ள மீட்டா டாக் எனப்படும் இரகசியக் குறியீடுகள் மூலம் படம் அல்லது வீடியோ எடுக்கப்பட்ட தேதியை நன்கு துல்லியமாக அறிய முடியும். இதனைக் கொண்டே சனல் 4 தொலைக்காட்சியானது இலங்கையில் நடைபெற்ற கொலைகளையும் அதன் தேதியின் அடிப்படையில் துல்லியமாக பகுப்பாய்வுசெய்து கண்டு பிடித்தது. பின்னர் ஐ.நா வும் இதனை உண்மையான காணொளி என தனது பகுப்பாய்வு மூலம் செய்திவெளியிட்டது. ஆனால் தற்போது தயாராகியிருக்கும் வீடியோக்கள் உண்மையானவை என்றாலும், அவை மே 2009ம் ஆண்டு நடைபெறவில்லை என்றும் அதற்கு பின்னரே நடைபெற்றது என்றும் தற்போது செய்திகள் கசிந்துள்ளது.

மே 2009ம் ஆண்டு நடந்த படுகொலைகளை உலகிற்கு காட்டியதால், சர்வதேச அழுத்தங்கள் இலங்கை மீது பாரியளவில் பிரயோகிக்கப்பட்டு வரும் இந் நிலையில் கூட இலங்கை இராணுவம் மிலேச்சத்தனமான காரியங்களில் ஈடுபட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை தருகிறது என விடையம் அறிந்த வட்டாரங்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

No comments: