டைரக்டர் சீமான் கோபம் என்ற பெயரில் புதிய படத்தை எடுக்க அதிரடியாக களமிறங்கவுள்ளார். நாம் தமிழர் கட்சிப் பணிகள், அரசியல் பணிகள் என நிற்க நேரமின்றி ஓடிக் கொண்டிருந்தாலும், அதிரடியான கதையுடன் ஒரு படத்தை இயக்கும் பணிகளிலும் அவ்வப்போது தீவிரம் காட்டி வருகிறார். இடையில் விஜய்யை வைத்து அவர் இயக்குவதாக இருந்த படம் ட்ராப் ஆகி விட்டதால், முன்பே யோசித்து வைத்திருந்த கோபம் என்ற தலைப்பிலேயே புதிய படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். தம்பி படத்தைப்போல பல மடங்கு வேகமும் அழுத்தமான காட்சிகளும் கொண்ட ஸ்கிரிப்ட் இது. இந்தப் படத்தில் நாயகனாக விஷால் அல்லது கார்த்தியை வைத்து இயக்க திட்டமிட்டுள்ளார் சீமான்.


No comments:
Post a Comment