Sunday, 4 December 2011

`ஒய்திஸ் கொலை வெறிடி'; பாடலுக்கு இந்தி பாடலாசிரியர் எதிர்ப்பு


 நடிகர் தனுஷ் `3' என்ற படத்தில் 'ஒய்திஸ் கொலை வெறி டி' என்ற  பாடலை  எழுதி பாடியுள்ளார். ஒய்திஸ் கொலை வெறிடி பாடல் ஆங்கிலம் கலந்து எழுதப்பட்டு  உள்ளது. இந்த பாடல் இன்டர்நெட்டில் வெளியான ஐந்து நாட்களில் பத்து  லட்சம் பேர் கேட்டனர். தற்போது எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டி உள்ளது.

இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளன. பெண்களை   இழிவுபடுத்துவது போல் வரிகள்   உள்ளன என்று  பெண்கள் சங்கத்தினர் கண்டித்தனர். இந்திப்பட உலகில்  40 வருடமாக பாடல் எழுதும் முன்னணி பாடலாசிரியர் ஜாவித் அக்தரும்  தனுஷ்  பாடலுக்கு எதிர்ப்பு  தெரிவித்துள்ளார்.

அவர் கூறும் போது மக்கள் உணர்வுகளை அவமதிப்பது போல் ஒய் திஸ் கொலை வெறி பாடல் அமைந்துள்ளது. எல்லோரும் மன்னனை புகழ்கிறார்கள். ஆனால் மன்னன்  நிர்வாணமாக  நின்று கொண்டு இருப்பது போல் இப்பாட்டு உள்ளது. மனம் போன போக்கில் பாடியுள்ளார் என்றார். பள்ளிகளில் மாணவர்கள் இப்பாடலை பாடுகின்றனர்.

இந்த பாட்டு குழந்தைகள் மனதை மிகவும் பாதிக்கும் என்று ஆசிரியை ஒருவர் கூறினார். பெண்களை கேலி செய்ய இளைஞர்கள் இப்பாட்டை  பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் சுந்தர் கூறும் போது  பெண்ணால் பாதிக்கப்பட்ட  இளைஞனின் உணர்வுகளை பாடல் பிரதி பலிப்பதால் சூப்பர் ஹிட்டாகியுள்ளது என்றார்

No comments: