Sunday, 4 December 2011

பிரசாந்த் மறுமண அறிவிப்பு

 


பிரசாந்த் மறுமணம் விரைவில் நடக்கும் என்று அவரது அப்பா தியாகராஜன் கூறினார்.

இதுபற்றி அவர்,    ‘’கடந்த 1983ம் ஆண்டு மலையூர் மம்பட்டியான் வெளியாகி வெற்றி பெற்றது. அப்போதே இப்படத்தை இன்னும் சில மாற்றங்கள் செய்திருந்தால், கொஞ்சம் பிரமாண்டமாக எடுத்திருந்தால், வெற்றி இன்னும் பெரிதாக இருந்திருக்குமே என்று எண்ணினேன்.

28 ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தை ரீமேக் செய்கிறேன். அன்று நான் நினைத்த மாற்றங்களை இதில் செய்திருக்கிறேன்.


 மம்பட்டியானாக பிரசாந்த் நடிக்கிறார். மலையூர் மம்பட்டியானில் காட்டு வழி போற பொண்ணே..என்ற பாடலை இளையராஜா பாடினார். அதேபாடலை இப்படத்தில் நான் பாடி இருக்கிறேன்.

இதை ரீமிக்ஸ் பாடலாக சிம்புவும் பாடி இருக்கிறார். ஹீரோயின் மீரா ஜாஸ்மின். தமன் இசை. மலையூர் மம்பட்டியான்இந்தி ரீமேக்கில் ரஜினி நடிப்பில் கங்குவாஎன்ற பெயரிலும்,

தெலுங்கில் கிருஷ்ணமராஜு, கன்னடத்தில் அம்பரிஷ் நடிப்பிலும் வெளியானது. இப்போது தயாராகியுள்ள மம்பட்டியான்படத்திற்கும் மற்ற மொழிகளில் இருந்து ரீமேக் உரிமை கேட்டுள்ளனர்.


இதற்கிடையில், ‘பிரசாந்த் மீண்டும் திருமணம் செய்வாரா?’ என்று கேட்கிறார்கள். அவரை ஏமாற்றி திருமணம் செய்தது செல்லாது என்று கோர்ட்டு ஏற்கனவே தீர்ப்பு சொல்லிவிட்டது. அவர் எத்தனை நாளைக்குத்தான் பிரம்மச்சாரியாக இருக்க முடியும். மம்பட்டியான்ரிலீஸின் போது அவரது திருமணம் பற்றிய அறிவிப்பு வரும்’’என்று கூறினார்.

No comments: