Tuesday, 18 October 2011

தள்ளாத வயதிலும் மரதன் ஓடிச் சாதித்த சாதனைத் தாத்தா! (வீடியோ இணைப்பு)


உலகின் பழமையான மரதன் ஓட்ட வீரர் என்ற பெருமை பிரித்தானியர் ஒருவருக்கு கிடைத்துள்ளது.

1911 ஆம் ஆண்டு பிறந்த 100 வயதான Fauja Singh என்பவரே மேற்படி பெருமையைப் பெற்றுள்ளார்.

எப்போதும் சந்தோசமாக இருப்பது தான் தனது வெற்றிக்கு காரணம் எனக் கூறினார் Fauja Singh.

தள்ளாத வயதிலும் எந்நேரமும் சுறுசுறுப்பாக காணப்படுகிறார் இந்தத் தாத்தா...




இவரை உண்மையிலேயே பாராட்டித் தான் ஆக வேண்டும்...

கிழக்கு லண்டனின் Ilford எனும் பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபர் 100 ஆவது வயதிலும் மரதன் ஓட்டம் ஓடி நிறைவு செய்ததற்காக அவரை உலகின் பழமையான மரதன் ஓட்ட வீரர் எனக் கூறி கின்னஸ் சாதனைப் பதிவுப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளார்.

பார்த்தீர்களா தாத்தாவின் திறமையை?

No comments: