அதற்கு இலங்கை அரசு இணங்கி வராவிட்டால், நாளை ஆரம்பமாகும் 18ஆவது கூட்டத் தொடரிலேயே இலங்கை அரசு கடும் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும் என்று கொழும்பிலுள்ள இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.
நாளை கொழும்பு வரும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக், நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை குறித்து இலங்கை அரசுடன் பேச உள்ளார்.
பிளேக்கின் இலங்கைப் பயணத்தின் முக்கிய நோக்கம் அதுவே என்று வாஷிங்ரனில் வெள்ளியன்று இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்டோரியா நூலண்ட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கை குறித்துப் பேசுவது பிளேக்கின் பயணத்தின் ஒரு பகுதி. அந்த அறிக்கையின் மூலம் நம்பிக்கைக்குரிய விதத்தில் முழுமையான பணியை அவர்கள் எப்படி ஆற்றமுடியும் என்பதை உறுதிப்படுத்துவதே அதன் நோக்கம்'' என்றார் நூலண்ட்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 19ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்பித்து விவாதிப்பதற்கு ஏற்ற வகையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையைத் தரும்படி அமெரிக்கா ஏற்கனவே கேட்டிருந்தது. ஆனால், உடனடியாக அதற்கு மறுப்புத் தெரிவித்திருந்த கொழும்பு, பின்னர் அறிக்கையின் சாராம்சத்தை மட்டும் தரமுடியும் என்று பின்னர் இறங்கி வந்தது.
எனினும், இலங்கையை முன்னோக்கி நகர்த்திச் செல்லக்கூடிய சிறந்த, உறுதியான, நம்பகத்தன்மை மிக்க அறிக்கை ஒன்று வருவதை உறுதிப்படுத்துவதே எமது முதல் இலக்கு என்று நூலண்ட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நாளை அமெரிக்காவில் இருந்து புறப்படும் பிளேக் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை கொழும்பை வந்தடைவார். உடனேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்தித்துப் பேசும் அவர், யாழ்ப்பாணத்துக்கும் செல்லவுள்ளார்.
இலங்கைப் பயணத்தை முடித்துக் கொண்டு நேரடியாக இந்தியா செல்லவுள்ளார் பிளேக். அங்கு அவர் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக புதுடில்லி ஆளும் வர்க்கத்துடன் தீவிரமாக ஆராய்வார் என்று தெரிகிறது.
நாளை கொழும்பு வரும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக், நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை குறித்து இலங்கை அரசுடன் பேச உள்ளார்.
பிளேக்கின் இலங்கைப் பயணத்தின் முக்கிய நோக்கம் அதுவே என்று வாஷிங்ரனில் வெள்ளியன்று இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்டோரியா நூலண்ட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கை குறித்துப் பேசுவது பிளேக்கின் பயணத்தின் ஒரு பகுதி. அந்த அறிக்கையின் மூலம் நம்பிக்கைக்குரிய விதத்தில் முழுமையான பணியை அவர்கள் எப்படி ஆற்றமுடியும் என்பதை உறுதிப்படுத்துவதே அதன் நோக்கம்'' என்றார் நூலண்ட்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 19ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்பித்து விவாதிப்பதற்கு ஏற்ற வகையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையைத் தரும்படி அமெரிக்கா ஏற்கனவே கேட்டிருந்தது. ஆனால், உடனடியாக அதற்கு மறுப்புத் தெரிவித்திருந்த கொழும்பு, பின்னர் அறிக்கையின் சாராம்சத்தை மட்டும் தரமுடியும் என்று பின்னர் இறங்கி வந்தது.
எனினும், இலங்கையை முன்னோக்கி நகர்த்திச் செல்லக்கூடிய சிறந்த, உறுதியான, நம்பகத்தன்மை மிக்க அறிக்கை ஒன்று வருவதை உறுதிப்படுத்துவதே எமது முதல் இலக்கு என்று நூலண்ட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நாளை அமெரிக்காவில் இருந்து புறப்படும் பிளேக் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை கொழும்பை வந்தடைவார். உடனேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்தித்துப் பேசும் அவர், யாழ்ப்பாணத்துக்கும் செல்லவுள்ளார்.
இலங்கைப் பயணத்தை முடித்துக் கொண்டு நேரடியாக இந்தியா செல்லவுள்ளார் பிளேக். அங்கு அவர் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக புதுடில்லி ஆளும் வர்க்கத்துடன் தீவிரமாக ஆராய்வார் என்று தெரிகிறது.

No comments:
Post a Comment