Sunday, 18 September 2011

பதுங்கி இருக்கும் கடாபியை சிறை பிடிக்க இங்கிலாந்து-பிரான்ஸ் உதவி


லிபியாவில் அதிபர் கடாபியின் 42 ஆண்டு கால சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்து விட்டது. தற்போது தேசிய மாற்று கவுன்சில் அமைப்பின் இடைக்கால அரசு பதவி வகித்து வருகிறது. எனவே கடாபியின் குடும்பம் அல்ஜீரியாவுக்கும், நைஜர் நாட்டுக்கும் தப்பி ஓடிவிட்டது. ஆனால் கடாபி லிபியாவில் தலைமறைவாகி விட்டார்.

அவர் எங்கு இருக்கிறார் என தெரியவில்லை. எனவே, அவரை ரகசிய இடங்கள் மற்றும் பதுங்கு குழிகளில் புரட்சி படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். லிபியாவில் புரட்சி ஏற்பட்டு ஆட்சி மாற்றம் உருவானதால் வெளிநாட்டு தலைவர்கள் இங்கு வந்த வண்ணம் உள்ளனர். ஐரோப்பிய நாடுகளான இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சார்கோஷி ஆகியோர் நேற்று தலைநகர் திரிபோலி வந்தனர்.
அங்கு புதிதாக அமைந்திருக்கும் இடைக்கால அரசின் தலைவர் முஸ்தபா அப்துல் ஜலீலை சந்தித்து பேசினார்கள்.

அப்போது, அவரிடம் இருவரும் கூறியதாவது:-

கடாபியின் ஆட்சி அதிகாரம் முற்றிலும் ஒழிக்கப்பட்டு மக்கள் நிம்மதியாக வாழும் வரை இங்கு நெட்டோ படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடும். மேலும் தலை மறைவாக இருக்கும் கடாபியை சிறை பிடித்து நீதியின் முன்நிறுத்த இங்கிலாந்தும், பிரான்சும் உதவும். மேலும் கடாபியின் ராணுவம் புதைத்து வைத்துள்ள கண்ணி வெடிகள் மற்றும் ஏவுகணைகளை கைப்பற்றி அழிக்கவும் உதவி செய்வோம் என்று தெரிவித்தனர்.

இதற்கிடையே கடாபியின் சொந்த நகரமான சிர்த் மற்றும் பாலைவன நகரமான வாடிபே ஆகியவற்றை கைப்பற்றும் நடவடிக்கையில் புரட்சிப்படை தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. அங்கு ராணுவத்துடன் 2 மணி நேரம் கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. அந்த நகரங்கள் முழுவதும் விரைவில் புரட்சி படை கட்டுப்பாட்டில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments: