Thursday, 18 August 2011

நடிகர் மாதவன், நடிகை பிபாஷா பாசு கண்டனம்


அன்னா ஹசாரே கைதுக்கு நடிகர் மாதவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.


அவர்,  ‘’அன்னா ஹசாரேவை தடுத்த விதம், அதிகாரிகளின் மிகவும் முட்டாள்தனமான, அற்பத்தனமான நடவடிக்கை என்பது எனது கருத்து. இது பெரிய தவறு. அமைதியாக போராட்டம் நடத்தும் ஹசாரேவின் உரிமை, அப்பட்டமாக மீறப்பட்டது குறித்து சுப்ரீம் கோர்ட்டு மவுனமாக இருப்பது ஏன்?




தகவல் பெறும் உரிமை சட்டம் போல, லோக்பால் சட்டமும் பின்னாளில் தனக்கு இடைஞ்சலாக இருக்கும் என்று மத்திய அரசு பயப்படுகிறதா?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகை பிபாஷா பாசு,   ‘’நாட்டை விழுங்கிக் கொண்டிருக்கும் `ஊழல்` என்னும் பேயை கொல்ல ஹசாரேவுக்கு எல்லோரும் ஆதரவளிக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

நடிகைகள் ஷபனா ஆஸ்மி, தியா மிர்சா ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

No comments: