அன்புள்ளங்கொண்ட தாயாய் நின்று உங்கள் பிள்ளைகளைக் காப்பாற்றுங்கள். நீதிமறுக்கப்பட்ட, இந்த இளம் தமிழர்களை, தூக்குக் கயிற்றில் இருந்து காப்பாற்ற உங்களால் மட்டுமே முடியும் என்று, தமிழர்கள் நாம் பூரணமாக நம்புகின்றோம். இவ்வாறு பிரான்சிலுள்ள தமிழர் நடுவம் தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையாரிடம் வேண்டுகொள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக தமிழர் நடுவம் - பிரான்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அம்மையாருக்கு!
தூக்குமரத்தின் நிழலில் நின்றபடி வாழ்வின் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கின்ற, நீதிமறுக்கப்பட்ட இளம்தமிழர் மூவரின் உயிர்காக்கும் தவிப்புடன் உங்களிடம் வேண்டிக்கேட்கின்றோம், அன்புள்ளங்கொண்ட தாயாய் நின்று உங்கள் பிள்ளைகளைக் காப்பாற்றுங்கள்.
காந்திதேசம் கருணை அற்றதா?
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை நிகழ்வின், நிழலில், இருபத்தியாறு பேருக்கு சிறப்பு நீதிமன்றம் மரணதண்டனைத் தீர்ப்பெழுதியது.
தூக்குக் கயிற்றின்முன் நிறுத்தப்பட்ட இருபத்தியாறு பேரில், பத்தொன்பது பேரை குற்றமற்றவர்கள் என முடிவுசெய்து உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது.
மூன்று பேருக்கு ஆயுள் தண்டனையாகவும், நாலு பேருக்கு மரண தண்டனையாகவும் அது தண்டனையைக் குறுக்கியது.
மரண தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்ட இளம் தாய் நளினி ஆயுட்தண்டனைக் கைதியாகி, இருபத்தியொரு ஆண்டுகளாக தன் இனியவாழ்வை இருண்ட சிறைகளில் கழித்துக்கொண்டிருக்கின்றார்.
தூக்குத் தண்டனைக் கைதிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று இளம் தமிழர்கள், தமது மரண தண்டனையை விலக்கக்கோரி, இந்திய குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைத்த கருணை மனுக்கள், பன்னிரண்டு ஆண்டுகள் கழிந்த நிலையில், தற்போதைய குடியரசுத் தலைவரால், நிராகரிக்கப்பட்டுள்ளன.
இந்தச் செய்தி, உலகத் தமிழர்களைப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்த நூற்றாண்டின், மிகப்பெரும் மனித அழிவையும், அவலத்தையும் சுமந்து தேற்றுவார் இன்றியும், துயர் ஆற்றுவார் இன்றியும் தவிக்கும் ஈழத்தமிழ் இனம், மீண்டும் மீண்டும் சோக நெருப்பில் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றது.
மீளவும் மீளவும் வஞ்சிக்கப்படுகின்ற இனமாகிப்போனோமா நாம் என்ற ஏக்கமே எம்மில் மிஞ்சிநிற்கின்றது.
மனித கண்ணியங்களும், மனித உரிமைகளும் தமிழர்கள் விடயத்தில் காற்றில் பறக்கவிடப்படுகின்றனவா? காந்திதேசம் தமிழர் விடயத்தில் கருணைக் கண்ணை இழந்துவிட்டதா? என்ற கேள்விகளே விஞ்சிநிற்கின்றன.
இளமை கரைத்து, வசந்தம் தொலைத்து சிறைக்கப்பிகளுக்குப் பின், மரணத்தின் நிழலில் காலம் கடந்தேனும் ஒரு வசந்தம் தோன்றாதா என்ற ஏக்கத்துடன் தவித்திருக்கும் இந்த இளம் தமிழர்கள் மீதான அரசியல் படிந்த கொடிய தீர்ப்புக்களும், கருணை மனுக்கள் நிராகரிப்பும் இந்தியா குறித்த எங்கள் அபிப்பிராயங்களில், மேலும் சந்தேகக்கோடுகளையே தோற்றுவித்துள்ளன.
ஈழத்தமிழ் இனத்தினதும், உலகத்தமிழ் இனத்தினதும், நம்பிக்கைக்குரியவராய் எதிர்பார்ப்பிற்கு உரியவராய், தமிழகத்தின் முதல்வராய் பொறுப்பேற்றிருக்கின்ற உங்கள் மீதே நாம் கடைசி நம்பிக்கை கொண்டுள்ளோம்.
நீதிமறுக்கப்பட்ட, இந்த இளம் தமிழர்களை, தூக்குக் கயிற்றில் இருந்து காப்பாற்ற உங்களால் மட்டுமே முடியும் என்று, தமிழர்கள் நாம் பூரணமாக நம்புகின்றோம்.
உலகத் தமிழினத்தின் நலன்சார்ந்து, நீங்கள் எடுத்து வைக்கும் ஒவவொரு அடியிலும் நம்பிக்கைவளர்த்து நிற்கின்றோம்.
கருணை உள்ளங்கொண்டு, உங்கள் பிள்ளைகளைக் காக்கும் அன்புக்கரம் கொண்ட தாயாகவே பார்க்கின்றோம்.
செய்யாத குற்றத்திற்காய், இருபத்தொரு ஆண்டுகள், கொடுஞ்சிறையில் வாழ்வின் இழமைகளை இழந்தவர்களின், உயிர்களைக் காப்பீர்கள் என்ற அசையாத நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம்.
நிட்சயம் உங்களுக்கு உலகத் தமிழினம் நன்றிக்கடன் பட்டிருக்கும்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அம்மையாருக்கு!
தூக்குமரத்தின் நிழலில் நின்றபடி வாழ்வின் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கின்ற, நீதிமறுக்கப்பட்ட இளம்தமிழர் மூவரின் உயிர்காக்கும் தவிப்புடன் உங்களிடம் வேண்டிக்கேட்கின்றோம், அன்புள்ளங்கொண்ட தாயாய் நின்று உங்கள் பிள்ளைகளைக் காப்பாற்றுங்கள்.
காந்திதேசம் கருணை அற்றதா?
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை நிகழ்வின், நிழலில், இருபத்தியாறு பேருக்கு சிறப்பு நீதிமன்றம் மரணதண்டனைத் தீர்ப்பெழுதியது.
தூக்குக் கயிற்றின்முன் நிறுத்தப்பட்ட இருபத்தியாறு பேரில், பத்தொன்பது பேரை குற்றமற்றவர்கள் என முடிவுசெய்து உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது.
மூன்று பேருக்கு ஆயுள் தண்டனையாகவும், நாலு பேருக்கு மரண தண்டனையாகவும் அது தண்டனையைக் குறுக்கியது.
மரண தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்ட இளம் தாய் நளினி ஆயுட்தண்டனைக் கைதியாகி, இருபத்தியொரு ஆண்டுகளாக தன் இனியவாழ்வை இருண்ட சிறைகளில் கழித்துக்கொண்டிருக்கின்றார்.
தூக்குத் தண்டனைக் கைதிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று இளம் தமிழர்கள், தமது மரண தண்டனையை விலக்கக்கோரி, இந்திய குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைத்த கருணை மனுக்கள், பன்னிரண்டு ஆண்டுகள் கழிந்த நிலையில், தற்போதைய குடியரசுத் தலைவரால், நிராகரிக்கப்பட்டுள்ளன.
இந்தச் செய்தி, உலகத் தமிழர்களைப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்த நூற்றாண்டின், மிகப்பெரும் மனித அழிவையும், அவலத்தையும் சுமந்து தேற்றுவார் இன்றியும், துயர் ஆற்றுவார் இன்றியும் தவிக்கும் ஈழத்தமிழ் இனம், மீண்டும் மீண்டும் சோக நெருப்பில் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றது.
மீளவும் மீளவும் வஞ்சிக்கப்படுகின்ற இனமாகிப்போனோமா நாம் என்ற ஏக்கமே எம்மில் மிஞ்சிநிற்கின்றது.
மனித கண்ணியங்களும், மனித உரிமைகளும் தமிழர்கள் விடயத்தில் காற்றில் பறக்கவிடப்படுகின்றனவா? காந்திதேசம் தமிழர் விடயத்தில் கருணைக் கண்ணை இழந்துவிட்டதா? என்ற கேள்விகளே விஞ்சிநிற்கின்றன.
இளமை கரைத்து, வசந்தம் தொலைத்து சிறைக்கப்பிகளுக்குப் பின், மரணத்தின் நிழலில் காலம் கடந்தேனும் ஒரு வசந்தம் தோன்றாதா என்ற ஏக்கத்துடன் தவித்திருக்கும் இந்த இளம் தமிழர்கள் மீதான அரசியல் படிந்த கொடிய தீர்ப்புக்களும், கருணை மனுக்கள் நிராகரிப்பும் இந்தியா குறித்த எங்கள் அபிப்பிராயங்களில், மேலும் சந்தேகக்கோடுகளையே தோற்றுவித்துள்ளன.
ஈழத்தமிழ் இனத்தினதும், உலகத்தமிழ் இனத்தினதும், நம்பிக்கைக்குரியவராய் எதிர்பார்ப்பிற்கு உரியவராய், தமிழகத்தின் முதல்வராய் பொறுப்பேற்றிருக்கின்ற உங்கள் மீதே நாம் கடைசி நம்பிக்கை கொண்டுள்ளோம்.
நீதிமறுக்கப்பட்ட, இந்த இளம் தமிழர்களை, தூக்குக் கயிற்றில் இருந்து காப்பாற்ற உங்களால் மட்டுமே முடியும் என்று, தமிழர்கள் நாம் பூரணமாக நம்புகின்றோம்.
உலகத் தமிழினத்தின் நலன்சார்ந்து, நீங்கள் எடுத்து வைக்கும் ஒவவொரு அடியிலும் நம்பிக்கைவளர்த்து நிற்கின்றோம்.
கருணை உள்ளங்கொண்டு, உங்கள் பிள்ளைகளைக் காக்கும் அன்புக்கரம் கொண்ட தாயாகவே பார்க்கின்றோம்.
செய்யாத குற்றத்திற்காய், இருபத்தொரு ஆண்டுகள், கொடுஞ்சிறையில் வாழ்வின் இழமைகளை இழந்தவர்களின், உயிர்களைக் காப்பீர்கள் என்ற அசையாத நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம்.
நிட்சயம் உங்களுக்கு உலகத் தமிழினம் நன்றிக்கடன் பட்டிருக்கும்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.


No comments:
Post a Comment