Tuesday, 30 August 2011

எல்லை தாண்டக்கூடாது : நடிகை ராதா

கோ பட நாயகி கார்த்திகா அறிமுகமான முதல் படத்திலேயே நல்ல பெயரை எடுத்திருந்தார். தற்போது அவரை தேடி நல்ல பல வாய்ப்புக்கள் வந்துகொண்டிருக்கிறனவாம். இதனால் கார்த்திகாவின் அம்மா, முன்னாள் நடிகை ராதா, கார்த்திகாவுக்ககு பல அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் அவர் அளித்துள்ள பேட்டியொன்றில், கர்த்திகாவை பெரிய டான்சர் ஆக்க வேண்டும் என்பதுதான் என் ஆசையாக இருந்தது. அதே சமயம் அவளுக்குப் பிடித்த துறையைத் தேர்ந்தெடுக்கும் அளவுக்குச் சுதந்திரமும் கொடுத்திருந்தோம். அவளும் சிறு வயதிலிருந்தே முறையாக பரத நாட்டியம் கற்றுக்கொண்டாள்.

படிப்பிலும் சுட்டி அவளுடைய முதல் பரதநாட்டிய அரங்கேற்றம் சிதம்பரம் நடராஜர் கோயிலில்தான் நடைபெற்றது. பல சினிமா வாய்ப்புகள் வந்தன. தமிழில் நல்ல டைரக்டர்இ நடிகர் படத்தில் அறிமுகமாக வேண்டும் என விரும்பினேன். என்று தெரிவித்துள்ளார்.

மேலும, எக்காரணம் கொண்டும் எல்லை தாண்டக்கூடாது என்று நடிகை கார்த்திகாவுக்குஇ அவரது அம்மா ராதா எச்சரித்துள்ளாராம்

No comments: