திருடனுக்கு தேள் கொட்டியதுபோல என்றொரு பழமொழி உண்டு. ஆனால், ரஷ்யாவை சேர்ந்த ஒரு திருடனுக்கு ஏற்பட்ட அனுபவம் வித்தியாசமானது. திருடப் போன இடத்தில் ஒரு இளம்பெண் தனனை 3 நாட்கள் செக்ஸ் அடிமையாக வைத்திருந்ததாக போலீசில் புகார் அளித்துள்ளார். ரஷ்யாவை சேர்ந்தவர் விக்டர் ஜாசிஸ்கி. வயது 32. கடந்த வாரத்தில் காசு இல்லாமல் கையை கடிக்கவே மெஷ்சோஸ்க் என்ற இடத்தில் உள்ள ப்யூட்டி பார்லரில் திருட முடிவு செய்தார். உள்ளே நுழைந்து பணப்பெட்டியை தேடினார். அப்போது நடந்த எதிர்பாராத தாக்குதலால் கீழே விழுந்தார்.
அரை மயக்கத்துக்கு போன விக்டர், அதன் பிறகு வேறு மயக்கத்தில் இருந்து மீளாதவராக போலீஸ் நிலையத்தில் இருந்தார். அவரை யாரும் பிடித்துக் கொடுக்காமல், புகார் கொடுக்க தானாகவே போலீஸ் நிலையம் வந்திருந்தார் அவர்.
அங்கு போலீசிடம் அவர் அளித்த புகார் இதுதான்: “பார்லருக்குள் நுழைந்ததும் யாரோ பலமாக தாக்க, கீழே சரிந்தேன். கராத்தே தெரிந்த பார்லரின் உரிமையாளரான இளம்பெண் ஆல்ஜா (28) என்னை அடித்து வீழ்த்தினார். அரை மயக்கத்தில் இருந்த என்னை அழகு நிலையத்தின் பின்னால் உள்ள ஒரு அறையில் கட்டிப் போட்டு நிர்வாணப்படுத்தி `செக்ஸ்’ அடிமையாக நடத்தினார். இரவு முழுவதும் பல மணி நேரம் என்னிடம் `செக்ஸ்’ அனுபவித்தார். இப்படி 3 நாட்கள் வைத்து இருந்த பிறகு என்னை விடுவித்தார்.
உணவாக ‘வயாகரா’ மாத்திரை மட்டுமே அளித்தார். பிறகு, ரிலீஸ் செய்தபோது ‘இதுதான் உனக்கு சரியான பாடம்’ என்று எச்சரித்து அனுப்பினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த புகாரை ஏற்ற போலீசார் ஆல்ஜாவை விசாரித்தனர். “ஆம். திருட வந்தவனுக்கு பாடம் புகட்ட முடிவு செய்தேன். ஓரிரு முறை உறவும் நடந்தது. ரிலீஸ் செய்யும்போது புதிய ஜீன்ஸ், நல்ல உணவு, 1,000 கரன்சி நோட்டுகளும் கொடுத்து அனுப்பினேன்” என்றார்.
என்ன செய்வதென்று தெரியாமல் முதலில் கையை பிசைந்த போலீசார், பிறகு திருட்டு முயற்சி குற்றத்தில் விக்டரையும், பாலியல் அத்துமீறல் புகாரில் ஆல்ஜாவையும் கைது செய்து தனித்தனி சிறையில் அடைத்தனர்.

No comments:
Post a Comment