!
மத்திய அமைச்சர் பதவியிலிருந்து தயாநிதி மாறனை நீக்க நேற்றே திமுக தலைவர் கருணாநிதி பிரதமர் மற்றும் சோனியா காந்திக்கு சம்மதம் தெரிவித்து விட்டாராம். இதையடுத்தே இன்று பதவி விலகியுள்ளார் தயாநிதி மாறன்.
தயாநிதி மாறன் விவகாரத்தில் திமுக கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளவில்லை என்பதை கடந்த 24 மணி நேரத்தில் நடந்த சம்பவங்கள் நிரூபிப்பதாக உள்ளன.
தயாநிதி மாறன் மீது சிபிஐ குற்றம் சாட்டி கோர்ட்டில் தெரிவித்த தகவலைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் நேற்று இரவு அவசர ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின்போது தயாநிதி மாறனை பதவி விலக கேட்டுக் கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டதாக தெரிகிறது.
அதன் பின்னர் கருணாநிதியுடன் தொடர்பு கொண்டு பிரதமரும், சோனியாவும் பேசியுள்ளனர். அப்போது கருணாநிதியின் சம்மதம் மற்றும் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு கருணாநிதி, தயாநிதி மாறனை நீக்குவதில் தனக்கு ஆட்சேபனை இல்லை என்று கூறியதாக தெரிகிறது.
அதன் பின்னர் சிபிஐ தாக்கல் செய்த அறிக்கை குறித்து நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ப.சதிதம்பரம் ஆகியோருடன் விவாதித்தார் பிரதமர். அடுத்து, அட்வகேட் ஜெனரல் வாஹன்வதியுடனும் அவர் ஆலோசனை நடத்தினார்.
அதன் பின்னரே தயாநிதி மாறனிடம் ராஜினாமா செய்யுமாறு அறிவுறுத்தும் முடிவுக்கு பிரதமர் வந்துள்ளார். இன்று காலை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின்போது பாதியிலேயே கிளம்பிய தயாநிதி மாறன் பிரதமரை சந்தித்தபோது பதவி விலகுமாறு பிரதமர் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.
இதைத் தொடர்ந்து தனது வீட்டுக்குத் திரும்பிய மாறன் அங்கு ராஜினாமா கடிதத்தை டைப் செய்து எடுத்துக் கொண்டு மீண்டும் பிரதமரைச் சந்தித்து தனது விலகல் கடிதத்தைக் கொடுத்து விட்டுக் கிளம்பினார்.
மொத்தத்தில், ராசா, கனிமொழி விவகாரத்தில் நடந்து கொ்ண்டதைப் போல் இல்லாமல், காங்கிரஸுக்கு பெரும் சங்கடத்தைக் கொடுக்காமல் தயாநிதி மாறன் விவகாரத்தில் திமுக தலைமை படு துரிதமாகநடந்து கொண்டிருப்பது தெளிவாகியுள்ளது.
தயாநிதி மாறன் விவகாரத்தில் திமுக கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளவில்லை என்பதை கடந்த 24 மணி நேரத்தில் நடந்த சம்பவங்கள் நிரூபிப்பதாக உள்ளன.
தயாநிதி மாறன் மீது சிபிஐ குற்றம் சாட்டி கோர்ட்டில் தெரிவித்த தகவலைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் நேற்று இரவு அவசர ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின்போது தயாநிதி மாறனை பதவி விலக கேட்டுக் கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டதாக தெரிகிறது.
அதன் பின்னர் கருணாநிதியுடன் தொடர்பு கொண்டு பிரதமரும், சோனியாவும் பேசியுள்ளனர். அப்போது கருணாநிதியின் சம்மதம் மற்றும் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு கருணாநிதி, தயாநிதி மாறனை நீக்குவதில் தனக்கு ஆட்சேபனை இல்லை என்று கூறியதாக தெரிகிறது.
அதன் பின்னர் சிபிஐ தாக்கல் செய்த அறிக்கை குறித்து நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ப.சதிதம்பரம் ஆகியோருடன் விவாதித்தார் பிரதமர். அடுத்து, அட்வகேட் ஜெனரல் வாஹன்வதியுடனும் அவர் ஆலோசனை நடத்தினார்.
அதன் பின்னரே தயாநிதி மாறனிடம் ராஜினாமா செய்யுமாறு அறிவுறுத்தும் முடிவுக்கு பிரதமர் வந்துள்ளார். இன்று காலை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின்போது பாதியிலேயே கிளம்பிய தயாநிதி மாறன் பிரதமரை சந்தித்தபோது பதவி விலகுமாறு பிரதமர் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.
இதைத் தொடர்ந்து தனது வீட்டுக்குத் திரும்பிய மாறன் அங்கு ராஜினாமா கடிதத்தை டைப் செய்து எடுத்துக் கொண்டு மீண்டும் பிரதமரைச் சந்தித்து தனது விலகல் கடிதத்தைக் கொடுத்து விட்டுக் கிளம்பினார்.
மொத்தத்தில், ராசா, கனிமொழி விவகாரத்தில் நடந்து கொ்ண்டதைப் போல் இல்லாமல், காங்கிரஸுக்கு பெரும் சங்கடத்தைக் கொடுக்காமல் தயாநிதி மாறன் விவகாரத்தில் திமுக தலைமை படு துரிதமாகநடந்து கொண்டிருப்பது தெளிவாகியுள்ளது.


No comments:
Post a Comment