Saturday, 23 July 2011

நம்மீதாவின் படுக்கை அறைக் காட்சியா ? இல்லவே இல்லை என்கிறார் !


சினிமாவுக்கு வந்து நடிக்கக் கூடாத படங்கள் சிலவற்றில் நடித்துவிட்டேன். அந்தத் தவறை இப்போது உணர்கிறேன் என்கிறார் நமீதா. ஏன் தெரியுமா ? சமீபத்தில் நமீதா குறித்து வெளியான புகைப்படத்தால் பெரும் கிசு கிசு தோண்றியுள்ளது ! நயந்தாரா சிம்பு கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படம் வெளியாகியதுபோல், தற்போது இந்தப் புகைப்படத்தால் தெலுங்கு தேசத்தில் பெரும் புரளி கிளம்பியுள்ளது. கவர்ச்சியில் புது எல்லைகளைத் தொட்டவர், வேறு எந்த நடிகைக்கும் இல்லாத அளவு புகழைப் பெற்றவர் நமீதாதான். அவருக்காகவே ஒரு டிவி ஷோ ஆரம்பி்க்கப்பட்டு, 6 மாதங்களில் அது மெகா ஹிட்டானதும் நமீதாவால்தான் என்பதனை எவரும் மறுக்கமுடியாது. தமிழில் இப்போதைக்கு வாய்ப்புகளைத் தவிர்த்து வரும் நமீதா, தெலுங்கு மற்றும் கன்னடத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த இரு மொழிகளிலும் தன்னை மையப்படுத்திய கதைகள் கிடைப்பதால் முன்னுரிமை அளிக்கிறாராம். ஹைதராபாதில் சமீபத்தில் நிருபர்களைச் சந்தித்தார் நமீதா. அப்போது அவர் கூறுகையில், "நான் சினிமாவுக்கு வந்து 9 வருடங்கள் ஆகிவிட்டன. அப்பா அம்மாவுக்கு நான் நடிக்க வந்தது பிடிக்கவில்லை என்றார்.

முதன் முறையாக "சொந்தம்" என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானேன். அப்போது எனக்கு வயது 17. மேக்கப் ரூமில் இருந்து அரை குறை ஆடையுடன் வெளியே வந்த என்னைப் பார்த்துவிட்ட அப்பா சங்கடத்தோடு தலையிலடித்துக் கொண்ட காட்சி இன்னும் என் மனதில் அப்படியே நிற்கிறது. சினிமாகாரர்களை கேவலமாக பார்க்கும் நிலைமைதான் எங்கும் உள்ளது. அதற்கு சினிமாக்காரர்களும் ஒரு காரணம்தான். மறுக்கவில்லை. இந்த நிலை மாற வேண்டும் என்று மேலும் தெரிவித்துள்ளார். என்னை ஒரு ஊறுகாய்போல தமிழ் படங்களில் கவர்ச்சிக்கு மட்டும் நடிக்கும்படி, கேட்கிறார்கள் என அவர் வேதனைப்பட்டார்.

No comments: