Sunday, 21 August 2011

கவுதம் மேனன் - ஜீவா இணையும் படம்: சமந்தா ஹீரோயின்!

ஜீவாவை வைத்து ஒரு புதிய படம் இயக்குகிறார் கவுதம் மேனன். இந்தப் படத்துக்கு நித்யா எனப் பெயரிட்டுள்ளார்.

இந்தப் படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் சமந்தா. பாணா காத்தாடி மூலம் அறிமுகமாகி, விண்ணைத் தாண்டி வருவாயாவில் கடைசி நேரத்தில் வரும் முக்கிய கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் சமந்தா. தமிழில் இன்னும் சரியான இடத்தைப் பிடிக்க முடியவில்லையே என தவிக்கும் சமந்தாவுக்கு மிகப் பெரிய வாய்ப்பாக இந்தப் படம் பார்க்கப்படுகிறது.

இந்தப் படம் வரும் 2012-ல் வெளியாகவிருக்கிறது. கோ படத்தைத் தயாரித்த ஆர்எஸ் இன்போடைன்மெண்ட் இந்தப் படத்தை தயாரிக்கிறது.

மனோஜ் பரமஹம்ஸா ஒளிப்பதிவு செய்ய, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். ராணாவுக்கான பாடல்கள் அனைத்தையும் ரஹ்மான் முடித்துக் கொடுத்துவிட்டதால், இப்போது புதிய படங்களை தமிழில் ஒப்புக் கொள்ள ஆரம்பித்துள்ளார் ரஹ்மான். அப்படி ஒப்புக் கொண்ட முதல் படம் இதுதான்.

வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி சென்னையில் 'நித்யா'வின் படப்பிடிப்பு நடக்கிறது.


No comments: