Sunday, 24 July 2011

நமாலுக்கு மெல்லாமா பந்தைப் போடவேனும்: மிரட்டிய ஆமி !



நேற்று முந்தினம் நமால் ராஜபக்ஷ கிளிநொச்சியில் உள்ள பாரதிபுரத்தில் தமிழ் இளைஞர்களோடு கிரிகெட் விளையாடியுள்ளார். இதற்காக சில தமிழ் இளைஞர்களை இராணுவம் மைதானத்துக்கு அழைத்துவந்துள்ளது. நமால் வருவதற்கு முன்னதாகவே அவர்களைக் கொண்டுவந்த இராணுவம் பந்து வீச இருந்த இரு தமிழ் இளைஞர்களை தனியாகக் கூட்டிச் சென்று வேகமாக பந்தை வீசக்கூடாது என்று மிரட்டியுள்ளனர். நமலுக்கு பந்து வீசும்போது மெல்லப் போடவேனும் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளனர். இதற்கு மேலும் நாம் எழுதவேண்டுமா ?

ஆமி சொன்னது போல பெடியள் பந்தை சும்மா வீசிவிட, நமால் சிக்ஸர் அடித்தாராம். அதனைப் பார்த்து அங்கே நின்றிருந்த காவலாளிகள் மற்றும் இராணுவத்தினர் கைதட்டி ஆரவாரப் படுத்தினராம். இது உள்ளூராட்சித் தேர்தலில் வாக்குச் சேகரிக்கின்றமைக்கான ஒரு உத்தி என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் இறுதியில் மண் கவ்வியது யார் என்று இப்ப தமிழர்களுக்கு மட்டுமல்ல சிங்களவர்களுக்கும் புரிஞ்சிருக்கும். ஏன் என்றால் தேர்தல் முடிவுகள் வந்திடிச்சில்ல !


No comments: