பாரிய குற்றங்களை இழைத்துவிட்டு நாட்டைவிட்டுத் தப்பியோடிய குற்றவாளிகளை சர்வதேச அளவில் தேடிப் பிடிக்க இன்ரர் போல் என்னும் சர்வதேச பொலிசார் அமைப்பு நிறுவப்பட்டது. ஒரு நாட்டில் தேடப்படும் நபரை அன் நாட்டு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தால், அதனை அன்நாட்டரசு இன்ரர் போல் தேடும் பட்டியலில் இணைக்குமாறு கோரிக்கை விடுக்கலாம். ஆனால் இலங்கை, பாக்கிஸ்தான், ரஷ்யா மற்றும் வெனிசுலா போன்ற நாடுகள் தமது அரசியல் எதிரிகளைக் கைதுசெய்ய, இன்ரர் போல் பொலிசாரைப் பயன்படுத்துவதாகவ அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஊடகவியலாளர் அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது. குறிப்பாக இலங்கை இன்ரர் போல் பொலிசாரை தவறாகப் பயன்படுத்துகிறது என்ற வாதங்களும் முன்வைக்கப்பட்டுள்ளது.இலங்கையானது வெளிநாடுகளில் வசிக்கும் தனது அரசியல் எதிரிகளைப் பழிவாங்கவே இன்ரர் போல் பொலிசாரை பயன்படுத்துவதாக தெரிவித்த அவ்வமைப்பு, இணையத்தள உரிமையாளர்களையும் , இலங்கை அரசுக்கு எதிராக எழுதும் எழுத்தாளர்களைக் கூட கைதுசெய்து தரும்படி இலங்கை இன்ரர் போலிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அது மேலும் தெரிவித்துள்ளது. சமீபத்தில் அமெரிக்க (வாஷிங்டனைத்) தளமாகக் கொண்டு இயங்கும் அமைப்பு மேற்கொண்ட ஆராட்சிகளில் இவ்விடையங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அவ்வமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசானது பல தமிழர்களுக்கு எதிராகவும் சில சிங்களவர்களுக்கு எதிராகவும் இன்ரர் போலிடம் முறையிட்டு அதற்கான பிடியாணையப் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்க விடையமாகும். அமெரிக்காவில் தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வானது, ஒரு முக்கிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆய்வின் பிரதிகள் இன்ரர் போல் தலைமையகத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர். இனி வரும் காலங்களில் இலங்கை கைதுசெய்து தரும்படி கூறும் நபர்கள் அதற்கு தகுதியுடையவர்களா என ஆராய்ந்த பின்னரே இன்ரர் போல் பொலிசார் செயல்படவேண்டும் எனக் கோரிக்கைகள் விடுக்கப்படவேண்டும்.

No comments:
Post a Comment