Wednesday, 20 July 2011

கும்மிருட்டு... கொசுக்கடி...வீட்டை விட்டு வெளியேறிய ரஜினி

இமிகிரேஷன் அதிகாரிகளின் அலட்சியத்தால் ரஜினி ஏர்போர்ட்டில் மூச்சிரைக்க நடக்க வேண்டி வந்தது என்ற முணுமுணுப்பு எழுந்து இன்னும் அடங்கக்கூட இல்லை. அதற்குள் இன்னொன்று கிளம்பியிருக்கிறது. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை ச்சும்மா கொசுக்கடி மேட்டர் இது. அதுவே ரஜினிக்கு என்று வரும்போது சற்று பூதாகரமாகிவிட்டது.

கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் தங்கியிருக்கிறார் ரஜினி. அங்கு போரடித்தால் வீனஸ் காலனியில் இருக்கும் தனது மூத்த மகள் ஐஸ்வர்யா வீட்டுக்கு வந்துவிடுகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் நள்ளிரவில் சொல்லாமல் கொள்ளாமல் ஐஸ்வர்யா வீட்டுக்கு வந்திருக்கிறார் ரஜினி.

அரண்டு போன மகள் ஏனென்று விசாரித்தாராம். அதற்கு ரஜினி சொன்ன பதில், ஒரு டிரான்ஸ்பார்மரே புகைந்து போகிற அளவுக்கு கோபத்தை ஏற்படுத்தும் அவரது ரசிகர்களுக்கு. விஷயம் இதுதான். நள்ளிரவில் பண்ணை வீட்டில் கரண்ட் கட். ...ந்தா வந்திரும் என்று காத்திருந்த ரஜினிக்கு நேரம் கடந்ததுதான் மிச்சம். வேறு வழியில்லாமல்தான் மகள் வீட்டுக்கு வந்து சேர்ந்தாராம்.

ஒரு ஜெனரேட்டர் வாங்கி வைத்துக் கொள்ள விரும்பாத அளவுக்கா எளிமையானவர் ரஜினி? ஆச்சர்யமாகதான் இருக்கிறது.

No comments: