இந்தப் பொதுக்கூட்டத்தை சீமானின் நாம் தமிழர் கட்சி நடத்துகிறது அந்தப் பொதுக்கூட்டத்தில் சீமானோடு இயக்குநர் அமீர் உள்ளிட்டவர்கள் பேசுகிறார்கள்.
இக்கூட்டத்தில் சீமான் கலந்து கொண்டிருக்கும் அதே வேளையில் சென்னையில் நடிகை விஜயலெட்சுமி என்பவர் சீமான் தன்னோடு வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் என்று ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இன்னும் தன்னிடம் 700 ஆதாரங்கள் இருப்பதாகவும், சீமான் மீது புகார் கொடுத்ததற்காக தன்னை சிலர் தமிழகத்தை விட்டுச் சென்று விடுமாறு மிரட்டுவதாகவும், நான் தான் தமிழகத்தை விட்டு எங்கும் செல்லப் போவதில்லை என்றும். சீமான் இலங்கைக்கு எதிராகப் போராடுகிறார். நான் சீமானிடம் போராடுகிறேன் என்றார்.
மதுரையில் சீமான் நிபந்தனை காவலில் ஒருந்த போது அவருடன் 15 நாட்கள் தங்கி இருந்தேன். 2008 ல் இருந்து 3 ஆண்டுகள் வாழ்ந்துவிட்டு ஏமாற்றிவிட்டார் சீமான்.என்று கூறியுள்ள விஜயலட்சுமி, தனது வீட்டில் சீமான் காதலர் தினம் கொண்டாடினார் என்று அதற்கான படத்தை வெளியிட்டுள்ளார்

No comments:
Post a Comment